பாலியல் குற்றங்கள் தொடர்பாக 6 மாநிலங்களில் 13 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 24: சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை உள்ளடக்கிய ஆன்லைன் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தீபகற்பத்தில் உள்ள ஆறு மாநிலங்களில் பல சோதனைகளில் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் 20 முதல் 74 வயதுக்குட்பட்ட ஆண்கள்.என்றும்,  அவர்கள் சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, பேராக், ஜொகூர் மற்றும் திரெங்கானு ஆகிய இடங்களில் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

13 சந்தேக நபர்களின் வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களை சோதனை செய்ததில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வயது வந்தோர் ஆபாச உள்ளடக்கம் கொண்ட 40,000 கோப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதையடுத்து 7 கணினிகள், ஒரு மடிக்கணினிகள், 11 கைபேசிகள், 16 மோடம்கள் மற்றும் ரூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *