துப்பாக்கிச் சூடு எதிரொலி! தலைநகர் குறித்து கவலை வேண்டாம்!- டான்ஸ்ரீ ரசாருடின்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 18: பிரிக்ஃபீல்ட்ஸ் மற்றும் செராஸில் இரண்டு மரண துப்பாக்கிச் சூடுகள் நடந்த போதிலும், தலைநகரில் பாதுகாப்பு கட்டுப்பாட்டிலும், சூழல் அமைதியாகவும் இருப்பதாக தேசிய காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் இன்று தெரிவித்தார்.

மக்கள், குறிப்பாக தலைநகரில் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று வலியுறுத்திய அவர், இரண்டு சம்பவங்களும் குழு போட்டி காரணமாக நடந்ததாக நம்பப்படுகிறது என்று தெரிவித்தார்.

தலைநகரில் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், கோலாலம்பூர் படை மற்றும் பிற கூறுகள் மூலம் காவல்துறை ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்!


Kuala Lumpur masih dalam keadaan terkawal walaupun berlaku dua insiden tembakan di Brickfields dan Cheras. Ketua Polis Negara menasihatkan orang ramai agar tidak panik. Rondaan polis dipertingkat untuk menjamin keselamatan awam dan mengelak kekacauan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *