பசிபிக் சிவா கும்பலைச்” சேர்ந்த 16 பேர் மீது சொஸ்மாவீன்கீழ் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

பட்டர்வெர்த், டிச. 24-

“பசிபிக் சிவா கும்பல்” என்ற பெயரில், கடந்த ஆறு ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக, மொத்தம் 16 பேருக்கு எதிராக, பட்டர்வெர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.

எம். சுப்ரமணியம் (வயது 44), ஜி. திலகராஜன் (வயது 36), எம். கேசவன் (வயது 39), என். ஷர்வின் (வயது 26), டி.எஸ். லிகன் குமார் (வயது 26), எம். தினேஷ்வரன் (வயது 24), பி. கிருபாகரன் (வயது 23), ஜி. மகேஷ்குமரா (வயது 27), எம். ஜனகேஷ் (வயது 28), ஆர். லோகேஷ்வராஜ் (வயது 30), கெ. ஹென்றி (வயது 44), எம். சிவசங்கரன் (வயது 37), எம். பார்த்திபன் (வயது 29), எஸ். அருணன் (வயது 32) எஸ். டெனிஸ்வரன் (வயது 28) மற்றும் வி. அழகிஸ் (வயது 31) ஆகியோரே அந்த 16 பேராவர்.

தி நோர் அஸா கஸ்ரான் முன்னிலையில் தமிழில் கூட்டாக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், அவை தங்களுக்கு புரிவதாக அவர்கள் அனைவரும் தலை அசைத்தனர்.இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டிருக்கும் சொஸ்மா சட்டத்தின் கீழ் வருவதால், அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டுகள் அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2024ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதிக்கிடையில் குற்றங்களைப் புரிந்ததாக, 23 முதல் 44 வயதுக்குட்பட்ட 14 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 2024ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதிக்கிடையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, 32 மற்றும் 44 வயதுடைய இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரைக்கும் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் (சட்டம் 574) செக்ஷன் 130வி(1) கீழ் இவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்காத நீதிமன்றம், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *