ஜலான் மஸ்ஜித் இந்தியா முழுமையாகத் திறக்கப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 1: ஜலான் மஸ்ஜித் இந்தியா பகுதி முழுவதுமாக நேற்று திறக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்பகுதியில் திடீரென நில அமிழ்வு ஏற்பட்டு,  அதில் விழுந்து  இந்திய மாது ஒருவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அப்பகுதி மூடப்பட்டது.

ஜலான் மஸ்ஜித் இந்தியாவை பொதுமக்களுக்கு மீண்டும் திறப்பதன் மூலம் தலைநகரம் பாதுகாப்பான, நிலையான மற்றும் வசதியான நகரமாக இருப்பதை உறுதி செய்வதாக DBKL தெரிவித்துள்ளது.

மேலும், மற்றொரு சரிவுக்கான அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் Adu@kl மூலம் புகார் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் அல்லது 03-40106337 ஐ தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மண் ஆய்வுகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது முழுவதுமாகத் திறக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23 அன்று, இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமி,  ஜலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது,  திடீரென  ஏற்பட்ட நில அமிழ்வில் மூழ்கி பலியானார். இதனை அடுத்து  ஒன்பது நாள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 31 அன்று நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு,  மனித செயல்பாடு மற்றும் மண் அரிப்பு ஆகியவை சிங்க்ஹோல் உருவாவதற்கு பங்களிக்கும் காரணிகளாக இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டது.

இது தொடர்பான விஷயத்தில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பயன்பாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, சுற்றியுள்ள பகுதிகளை அவ்வப்போது கண்காணித்து வருவதாக DBKL தெரிவித்துள்ளது.

DBKL க்கு அரசாங்கம் ஒதுக்கிய RM10 மில்லியன், சிங்க்ஹோல் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க புவி தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *