விளையாட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பெண்ணைக் கொன்றவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 24: இந்த மாத தொடக்கத்தில் கால்பந்து விளையாட்டைப் பார்க்க செல்வதற்காக 28 வயது பெண்ணைக் கொன்றதாக நம்பப்படும் 23 வயது இ-ஹெய்லிங் டிரைவர் மீது கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்பதால் ஜக்வான் மொக்தார் எனும் அவ்வாடவரிடமிருந்து எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தி போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,  இது மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை வழங்க வகை செய்கிறது.

 ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்பதால், ஜக்வான் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மாஜிஸ்திரேட் சியாரிஃபா பாத்திமா அஸுரா, பிப்ரவரி 10 ஆம் தேதி இவ்வழக்கை மறு செவிமடுப்புக்கு உத்தரவிட்டார்.

நூருல் அசிகின் லான் எனும் பெண்ணை கடந்த  டிசம்பர் 6 ஆம் தேதி கொலை செய்து, கம்போடியாவில் நடைபெற்ற AFC சாம்பியன்ஷிப் போட்டியைப் பார்ப்பதற்காக அப்பெண்ணின் நகைகளைக் கொள்ளையடித்ததாக ஜக்வான் மீது குற்றம் சாட்டப்பட்டது!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *