பினாங்கு பாலத்திலிருந்து விழுந்த ஆடவர் மரணம்!

- Shan Siva
- 19 Feb, 2025
பினாங்கு, பிப் 19: பினாங்கு பாலத்தின் KM5.5 இலிருந்து நேற்று விழுந்த 48 வயதுடைய நபரின் உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
பாயான் லெபாஸைச்
சேர்ந்த அந்த நபர் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் பாலத்திலிருந்து விழுந்ததாக தீமோர்
லாவுட் காவல்துறைத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
சம்பவம் குறித்து
அதிகாலை 2.50 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன்
அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியதாக அவர் கூறினார்.
இன்று காலை 9.05
மணியளவில், பாலத்தின் தூண்களுக்கு அருகில் தேடுதல் குழு
பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டுபிடித்தது.
குடும்ப
உறுப்பினர்கள் தீமோர் லாவுட் காவல் தலைமையகத்தில் உடலை அடையாளம் கண்டதோடு, பிரேத பரிசோதனைக்காக உடல் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டது என்று ரோசாக் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *