2 நிமிடங்களில் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை!

- Shan Siva
- 27 Dec, 2024
கோலாலம்பூர், டிச 27: கல்வத் குற்றத்திற்காக ஷரியா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஆடவர் ஒருவருக்கான பொது பிரம்படி இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கோலா திரெங்கானுவில் நிறைவேற்றப்பட்டது.
42 வயதான
அஃபென்டி அவாங்கிற்கு, அல்-முக்தாபி
பில்லா ஷா மசூதியில் 90 பேர் முன்னிலையில் பிற்பகல் 2.50 மணியளவில் பிரம்படி வழங்கப்பட்டதாக
அஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.
இரண்டு
நிமிடங்களில் இத்தண்டனை நிறைவுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கப்படுவதற்கு
முன் அஃபெண்டியை மருத்துவ அதிகாரி பரிசோதித்தார். தண்டனைக்குப் பிறகு அந்நபர் மீண்டும்
சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
திரெங்கானுவில் பொதுமக்கள் முன்னிலையில்
பிரம்படியால் தண்டிக்கப்பட்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *