பொதுவெளியில் பிரம்படி! - போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 25: ஷரியா நீதிமன்றத்தால் வரும் வெள்ளிக்கிழமை கல்வத்துக்காக ஒருவர் தண்டிக்கப்படவிருப்பதையொட்டி, திரெங்கானுவில் உள்ள அல்-முக்தாபி பில்லா ஷா மசூதியில் 70 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்று போலீசார் நிர்ணயித்துள்ளனர்.

மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருபவர்கள் தொழுகையை முடித்துவிட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்று கோலா திரெங்கானு காவல்துறைத் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்துள்ளார்.

தண்டனை பகுதிக்குள் 70 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தண்டனையை சுமூகமாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மசூதிக்கு வெளியேயோ அல்லது அதைச் சுற்றியோ பொதுமக்கள் கூட வேண்டாம் என்று அவர் நினைவூட்டினார்.

சம்பந்தப்பட்ட நபருக்கு பிரம்படி தண்டனையை நடத்தும் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 40 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்..

42 வயதான அஃபெண்டி அவாங் என்பவர் திரெங்கானுவில் பொதுவெளியில் பிரம்படி தண்டனை பெறவிருக்கும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது

.ந்நிலையில் , PAS இளைஞர் பிரிவு தகவல் தொடர்பு இயக்குனர் நஸ்ருல் நசீர், இந்த தண்டனையானது சமுதாயத்திற்கு கல்வி கற்பதற்கும் தார்மீக சிதைவைத் தடுப்பதற்கும் நோக்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

குற்றவாளியின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களும் ஷரியா நீதித்துறையால் வழங்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *