அதிகாலை விபத்து! தாய் - மகன் பலி

- Shan Siva
- 26 Dec, 2024
கோலாலம்பூர், டிச 26: தெற்கு மேற்கு கடற்கரை விரைவுச்சாலையின் Km212.3 இல் இன்று அதிகாலை இரண்டு வாகனங்கள்
மோதிய விபத்தில் 24 வயதான தாயும் அவரது குழந்தையும் உயிரிழந்தனர்.
மஞ்சோங் அருகே
அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் நோர் ஃபதிலா அஸ்லான் என்பவரும், அவரது இரண்டு வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெர்னாமா
செய்தி வெளியிட்டுள்ளது.
தாயும் மகனும்
பெரோடுவா கெலிசாவில் பயணம் செய்த நிலையில், அக்காரில்
இருந்த 24 வயது இளைஞனும், மூன்று வயது
சிறுவனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
மற்றொரு வாகனமான புரோட்டான்
வீராவில் வந்த பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு ஆண்களும் சிறு காயங்களுக்கு ஆளாகினர்.
அதிகாலை 5.15
மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பேராக் தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் சபரோட்சி நோர் அகமட் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *