RM 2 கோடியே 66 லட்சம் இழந்த டத்தோ! ஆன்லைன் மோசடியில் பரிதாபம்!

- Shan Siva
- 21 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 21:
UVKXE செயலியில் கிரிப்டோகரன்சி
முதலீட்டு மோசடியால் தவறாக வழிநடத்தப்பட்ட “டத்தோ” பட்டம் கொண்ட ஒரு தொழிலதிபர், 2 கோடியே 66 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்து மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஃபீல்ட்ஸில்
நேற்று சம்பந்தப்பட்ட அந்த நபர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாகவும் புக்கிட் அமான்
வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ராம்லி யூசுப் தெரிவித்தார்.
கூகுளில் தேடும் முதலீட்டிற்கான
விளம்பரத்தைக் கண்டதாக அவர் கூறியதாக சினார் ஹரியன் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக வருமானம்
கிடைக்கும் என்ற வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட அவர், UVKXE செயலியைப் பதிவிறக்கம் செய்ததாக அவர் தெரிவித்ததாக ரம்லி கூறினார்.
கடந்த ஆண்டு
அக்டோபர் 17 முதல் டிசம்பர் 24 வரை, அந்த நபர் பல்வேறு நிறுவனங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒன்பது வங்கிக்
கணக்குகளுக்கு இந்தப் பணத்தை மாற்றியதாக அவர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் தனது முதலீட்டுக் கணக்கைச்
சரிபார்த்ததாகவும், கிரிப்டோகரன்சியில்1.2 பில்லியன் லாபம் ஈட்டியதைக் காட்டியபோது
மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும்,
அவர் நிதியை எடுக்க முயன்றபோது, வரி நோக்கங்களுக்காக மேலும் 5 கோடியே 56 லட்சம் கூடுதலாக செலுத்துமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக ரம்லி கூறினார்.
இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஐந்து வங்கிக் கணக்குகள் விசாரணையில் உள்ள 38 பிற மோசடி வழக்குகளுடன் தொடர்புடையவை என்றும், இதுவரை, UVKXE முதலீட்டு மோசடி தொடர்பாக 46 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ ரம்லி மொத்த இழப்புகள் RM61.4 மில்லியன்” என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *