வண்ணமய தேசம் மகிழ்ச்சியாய் விளங்கட்டும்!

top-news
FREE WEBSITE AD

உலகமே வியக்கும் பல்வேறு பெருநாள் கொண்டாட்டங்கள், கலாச்சாரத் திருவிழாக்கள் என ஒற்றுமையாய் வண்ணமயமாய் விளங்கும் ஒரு தேசம் என்றால், அது நம் மலேசிய தேசம்தான். பல்லினமும் ஒற்றுமையாய் எவ்வித வேறுபாடுகளும் இன்றி இன்றுபோல் எப்போதும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் எண்ணமாய் இருக்கிறது.

அந்த வகையில் மனித புனிதர் இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், நம் நாட்டிலுள்ள கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என, மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நாடு மென்மேலும் வளமாக எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உறுதுணையாய் இருக்கட்டும்.இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின வாழ்த்துகள் என ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *