போர்ட்டிக்சன் கடற்கரையில் ஒதுங்கிய சடலம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 31: போர்ட் டிக்சன் தெலுக் கெமாங் கடற்கரையில் நேற்று  ஆடவர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியதாக போலீசார்  தெரிவித்தனர்.

 இறந்தவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்றும், உடல் தோற்றத்தின் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது என்றும்  போர்ட்டிக்சன் காவல்துறைத் தலைவர் மஸ்லான் உதின் கூறினார்.

பாதிக்கப்பட்டவர், சுமார் 165 செ.மீ உயரம், குட்டையான முடி, பளபளப்பான தோல் மற்றும் வலது கையில் பச்சை குத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்தவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணையில் உதவ காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு மஸ்லான் கேட்டுக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *