பேராக், பினாங்கு இந்திய பத்திரிகை விநியோகஸ்த சங்கத்தினர் ஒன்று கூடினர்!

top-news
FREE WEBSITE AD

(ஆர். கிருஷ்ணன்)

ஈப்போ, டிச. 27-

பேராக் மற்றும் பினாங்கு இந்திய பத்திரிகை விநியோகஸ்தர் சங்கத்தினர் இங்கு ஒன்று கூடினர். கிறிஸ்துமஸ். பண்டிகையை முன்னிட்டு பொதுவிடுமுறை என்பதால் பத்திரிகை துறைக்கும் விடுமுறை வழங்கப்பட்டது என்று பேராக் இந்திய பத்திரிகை விநியோகஸ்தர்கள்(பிண்டா) சங்க தலைவரும், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவருமான பெ.கார்திகேயன் கூறினார்.

இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு இந்த இரு மாநில இந்திய பத்திரிக்கை விநியோகஸ்தர்கள் ஒன்று கூடினர். இச்சந்திப்பில் இரு தரப்பினரின் சங்க நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இனிவரும் காலங்களில் இந்த இரு சங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஒன்றுகூடி கலந்தாலோசித்து தீர்வு காண முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பத்திரிகை விநியோகஸ்தர்களின் சமூக நலன் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இந்த ஒன்று கூடல் நாளில் பேராக் இந்திய பத்திரிகை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பெ. கார்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு  அனிச்சல் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பினாங்கு இந்திய பத்திரிகை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் ஆலோசகர் முருகேசு தலைமையில் வருகை மேற்கொள்ளப்பட்டது. பினாங்கு விநியோகஸ்தர்களை சிறப்பிக்கும் பொருட்டு விருந்தோம்பலுடன் இந்நிகழ்வு இனிதே முடிவுற்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *