ஒவ்வொரு பெருநாளையும் ஒற்றுமையாக கொண்டாடுவோம் -ஏசிபி அன்பழகன் தகவல்!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

பூச்சோங், டிச. 24-

ஒவ்வோர் ஆண்டும் நம் நாட்டில் 4 பெரிய பெருநாள்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இம்மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செர்டாங் மாவட்ட போலீசார் ஏற்பாடு செய்த பூச்சோங் கின்றாரா தாமான் கந்தானில் உள்ள விக்டோரியா ஆதரவற்ற இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ. அன்பழகன் தெரிவித்தார்.




இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்து ஏசிபி ஏ. அன்பழகன் கூறுகையில் ஒவ்வோர் ஆண்டும் நம் நாட்டில் நடக்கின்ற பெருநாளை ஒவ்வோரு ஆதரவற்ற இல்லங்களில் நடத்தி
வருகின்றோம்.காரணம் ஆதரவற்று உள்ளவர்களும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் நடத்தி வருகின்றோம் என்று அவர் கூறினார்.

நேற்று முன்தினம் விக்டோரியா ஆதரவற்ற இல்லத்தில் 70வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்கள், 14 சிறுவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அன்றாடம் தேவையான உபயோகிக்கக் கூடிய பொருட்கள், பொருள் கூடைகள் பரிசு பொட்டலங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆதரவற்ற இல்லத்திலும் மூவின மக்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகின்றோம் என்று அவர் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் மற்றும் ஹரிராயா, தீபாவளி, சீனப்புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பெருநாள் காலங்களில் ஓர் ஆதரவற்ற இல்லங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.




இந்த நிகழ்ச்சிக்கு பக்க பலமாக தச்சின் லயிவ் கிளாப் பல உதவிகளை செய்து வருகின்றது. அவர்களுக்கு இந்த வேளையில் நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வுக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் பூச்சோங் தொழிலதிபர் டத்தோ ஹரிகிருஷ்ணன், ஏசிபி ஏ. அன்பழகனின் துணைவியார் கலந்துகொண்டனர். "

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *