ஒற்றுமை உணர்வோடு வாழ்வோம்-செனட்டர் சரஸ்வதி கந்தசாமி!

- Muthu Kumar
- 25 Dec, 2024
பகைவர்களையும் நேசித்து, இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யுங்கள் என்று போதித்தவர் இயேசு பெருமான். அவ்வகையில் பகைமையில்லா, அன்பு நிறைந்த ஒரு சமுதாயமாய், தேசத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும் என்பதே, இந்த நன்னாளில் நாம் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கட்டும் என்று தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளார்.
நாடு எப்போதும் வளமுடன் இருக்க, நல்லாட்சியின் கீழ் மக்கள் சுபிட்சமாக இருக்க இறைவனை வேண்டித் துதிப்போம். நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள். அதோடு நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *