திரெங்கானுவை அடுத்து, PN தலைமையிலான மற்ற மாநிலங்களிலும் கசையடி - பாஸ் விவாதிக்கும்

- Shan Siva
- 29 Dec, 2024
கோத்தா பாரு, டிச 29: பெரிகாத்தான் நேஷனல் தலைமையிலான அனைத்து மாநிலங்களிலும் பொது கசையடியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் அடுத்த ஷயுரா கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பாஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது அடுத்த ஆண்டு
நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பாஸ்
கட்சியின் ஆன்மீகத் தலைவர் டத்தோ ஹாசிம் ஜாசின் தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,
PN தலைமையிலான அனைத்து
மாநிலங்களிலும் இதனைச் செயல்படுத்துவதை அவசரப்படக்கூடாது என்று அவர் கூறினார்.
சமீபத்தில்
திரெங்கானுவில் முதல் பொது தடியடி நடத்தப்பட்ட பிறகு, பெரிகாத்தான் நேஷனல் ஆளப்படும் மற்ற மாநிலங்களிலும் இது
செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும்,
இது தனது பரிந்துரை மட்டுமே என்றும், அதை செயல்படுத்துவதற்கு முன் விரிவான
தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தாம்
புரிந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய
தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், காவல்துறை, மதத் துறைகள்
மற்றும் பிற தொடர்புடைய ஏஜென்சிகள் போன்ற அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்யப்பட
வேண்டும் என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு
சைரா கவுன்சில் கூட்டத்தின் போது இந்த விஷயத்தை தாம் கொண்டு வர
திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *