மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 107 ஆண்டுகள் சிறை!

- Sangeetha K Loganathan
- 24 Jun, 2025
ஜூன் 24,
திரங்கானுவில் உள்ள இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கியில் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியருக்கு 107 ஆண்டுகள் சிறை விதித்து திரங்கானு Sesyen நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திரங்கானு மாராங்கில் உள்ள பகுதியில் 16 வயது மாணவியைக் கடந்த 2020 முதல் 2021 ஆண்டு வரையில் பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட 16 வயது மாணவியிடம் நடத்தப்பட்ட சோதனையில் தலைமையாசிரியர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் திரங்கானு Sesyen நீதிமன்ற நீதிபதி Mohd Zul Zakiqudin Zulkifli தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்.
குற்றம்சாட்டப்பட்ட 60 வயது Rosli Abd Rahman எனும் தலைமையாசிரியருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் குறைந்தப்பட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பின்னர் RM40,000 ஜாமின் செலுத்தி மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயது Rosli Abd Rahman எனும் தலைமையாசிரியருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Mahkamah Sesyen Terengganu menjatuhkan hukuman penjara 107 tahun terhadap seorang guru besar berusia 60 tahun selepas didapati bersalah merogol seorang pelajar perempuan berusia 16 tahun antara tahun 2020 hingga 2021 di Marang.
Tertuduh, Rosli Abd Rahman, berdepan 13 pertuduhan berkaitan kes dan hanya boleh membuat rayuan selepas menjalani minimum 15 tahun hukuman serta membayar jaminan RM40,000.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *