நாளைய தீர்ப்பில் மூடாவின் எதிர்காலம்!

- Shan Siva
- 24 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 24: நாளை அறிவிக்கப்படவிருக்கும் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை மற்றும் அதற்கு எதிரான மேல்முறையீட்டின் முடிவைப் பொறுத்து, மூடா கட்சியின் எதிர்காலம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என
எதிர்பார்க்கப்படுவதால், புதிய தலைவரை
நியமிக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் அமிரா கூறினார்.
இப்போதைக்கு,
அந்தப் பதவியை நிரப்ப வேண்டிய அவசரம் எதுவும்
இல்லை என்றும், உறுப்பினர்களின்
முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் அவர் கூறினார்.
2023 நவம்பரில்,
குற்றவியல் நம்பிக்கை மீறல், சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும்
பணமோசடி செய்ததற்காக சையத் சாதிக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என
அறிவிக்கப்பட்டார்.
இளைஞர் மற்றும்
விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சராகவும் இருந்த அவருக்கு ஏழு ஆண்டுகள்
சிறைத்தண்டனை, RM10 மில்லியன்
அபராதம் மற்றும் இரண்டு பிரம்படிகள் வழங்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும் மேல்முறையீட்டு
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவது நிலுவையில் உள்ளதால், தண்டனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பின்னர் அவர்
தற்காலிகமாக மூடா தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் ஈடுபடப் போவதில்லை
என்றும் அறிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *