பேரா மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை : -சிவநேசன்

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, டிச.28-

பேரா மாநிலத்தில் உள்ள 15 அரசாங்க பொது மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கட்டமைப்பில் மிக மிக உன்னதமான நிலையில் இருக்கின்றன என்று தான் கூறுகிறேன். ஆனால், மருத்துவ நிபுணர்கள் தான் பற்றாக்குறை இருந்துகொண்டே வருகிறது.இந்த பிரச்சினையைக் குறித்து சுகாதார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என மாநில சுகாதார இலாகாவுக்கு தலைமையேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம்  தெரிவித்தார்.

மேலும், அரசாங்க மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்றும், மருந்துகள் கைவசம் இல்லை என்றும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை என்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டது இல்லை.

24 மணி நேரமும் வருகை அளிக்கும் நோயாளிகளுக்கும் தீவிர நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த சூழ்நிலையில், பேரா மாநிலத்தைச் சேர்ந்த தைப்பிங் அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் காட்டிய அலட்சியப் போக்கினால், கடுமையான உடல் பாதிப்புக்கு ஆளான ஒரு பாதுகாப்பு பணியாளரான 28 வயதுடைய பி.தினகரனுக்கு வெ.17 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தைப்பிங் உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டதை பத்திரிகை மூலம் அறிந்துள்ளேன் என்றார்.

தைப்பிங் பொது மருத்துவமனை மாநிலத்தில்
2 வது பெரிய நிபுணத்துவ மருத்துவமனையாகும். தைப்பிங் உயர்நீதிமன்றத்தின் 69 பக்கங்கள் கொண்ட தமது தீர்ப்பில் நீதிபதி கூறினார். இத்தீர்ப்பையொட்டி அரசாங்கம் மேல் முறையீடு செய்யுமா?என்பதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என சிவநேசன் சுட்டிக்காட்டினார்.

எது எப்படி இருப்பினும், மாநில சுகாதார இலாகாவுக்கு பொறுப்பேற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தினகரன் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சிவநேசன் மனம் திறந்து சொன்னார்.தவிர, தைப்பிங் உயர்நீதிமன்றத்தின் 69 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முழுவிபரத்தையும் படித்தறிவேன். அதன்படி, தினகரின் உடல் பாதிப்புக்கு அம்மருத்துவமனையின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்றால், அந்த அறுவை சிகிச்சையினை மேற்கொண்ட மருத்துவர்கள் யார்? எந்த மருத்துவரின் தலைமையில் இந்த சிகிச்சை நடத்தப்பட்டது? என்னும் ஆய்வை சுகாதார இலாகா மேற்கொள்ளும்.

கடந்த 2.1,2016 இல் பிற்பகல்1 மணிக்கு நடந்த சாலை விபத்தில் படு காயமுற்ற தினகரன் முதலில் பாரிட் புந்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பிறகு தைப்பிங் பொது மருத்துவமனையில் 3.1.2016 8.00 மணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் செய்தியைப் படித்தேன்.

விபத்து நடந்த காலத்தில் இருந்து சிகிச்சை அளித்துள்ள காலம் என்பது ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாள் தாமதம் தான் இந்த பாதிப்புக்கான காரணம் என்பது மருத்துவமனையின் அலட்சியமே முழு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானால், அந்த ஒரு நாளில் என்னதான் நடந்துள்ளது என்ற விளக்கம் நீதிமன்ற தீர்ப்பில்தான் இருக்கும். இந்நிலையில், மாநில சுகாதார இலாகாவின் இயக்குநரையும், வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று தினகரனுக்கு வழங்கிய சிகிச்சையின் போது அதில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களிடம் விளக்கம் அறியப்படும் என்றும் சிவநேசன் விவரித்தார்.

சிகிச்சைக்கான தாமதம்தான் முழுகாரணமா? இந்நிலையில், அரசாங்கம் இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப் போகிறதா? அப்படி மேல்முறையீடு செய்வதென்றால் தான் அதற்கான அடிப்படையாக இந்த காரணத்தை காண்பித்து மேல்முறையீடு செய்யும் திட்டம் சுகாதார இலாகாவுக்கு உள்ளதா? என்றும் கேள்வி எழுகிறது என்றார்.

மேலும், இந்த தீர்ப்பின் உள்ளடக்கத்தில் எல்லா விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி 100 சதவீதம் மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்றால், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அரசிடம் பதில் சொல்லவேண்டும். ஏன் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டது என்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது சுகாதார இலாகாவின் தலையாய கடமை என்றார் சிவநேசன். மீண்டும், இது போன்று நிகழ்வு நடைபெறாமல் இருப்பதற்கு இந்த ஆய்வின் நடவடிக்கை என்பது மிக மிக முக்கியமாக உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *