சபாவில் பற்றி எரிந்த கிறிஸ்துமஸ் மரம்!

top-news
FREE WEBSITE AD

சபா, டிச 25: சபா, சண்டகான் ஐஜேஎம் ரவுண்டானா, பத்து 6 பகுதியில் இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிந்தது.

அதிகாலை 3.37 மணிக்கு தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர் ஏழு தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் நிட்ஜாம் சைன்குய் தெரிவித்தார்.

அதிகாலை 3.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவர் கூறினார்.

உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *