கால்நடை மருத்துவத்துறை மாணவிக்கு லிங்கேஸ்வரன் நிதி உதவி!

- Muthu Kumar
- 27 Dec, 2024
(தி.ஆர்.மேத்தியூஸ்)
பினாங்கு, டிச. 27-
இந்தோனேசியா போகோர் ஐபிபி பல்கலைக்கழகத்தில்,கால்நடை மருத்துவத் துறையில் பயின்று வரும் இந்திய மாணவி லோவினிஸுக்கு,மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர்.ஏ.அருணாசலம் நிதியுதவி வழங்கினார்.
இப்பல்கலைக்கழக்தின் மூன்றாம் ஆண்டு மாணவியான இவருக்கு, 2025 -ஆம் ஆண்டுக்கான தங்கும் விடுதியின் முழு கட்டணத்தையும் செலுத்தி உதவினார்.தாம் வழங்கிய இந்த உதவி சிறியதாக இருந்தாலும்,இவரின் கல்வி முழுமையடைந்தால் 2027 -ஆம் ஆண்டில் இவர் ஓர் சிறந்த கால்நடை மருத்துவராக வெளியேறுவார் என அவர் தெரிவித்தார்.
தனித்து வாழும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் வசதிக் குறைந்த இந்த மாணவி தமது மேல்நிலை கல்வியை தொடர வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர்,மற்ற இந்திய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவருமான செனட்டர் டாக்டர் ஆ.லிங்கேஸ்வரன் கூறினார்.
சிறந்த எதிர்காலத்திற்கு,சிறிய ஆதரவும்,பெரிய நம்பிக்கையும் கொண்டு பயின்று வரும் மாணவி லோவினிஸ்,எதிர்காலத்தில் நமது சமுதாயத்துக்கு பெரிய பங்களிப்பை வழங்குவார் என தமது வாழ்த்தையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *