அமைச்சர், துணையமைச்சர் பேச்சுவார்த்தை இந்தியர்களின் பிரச்சினை களைய வழி!

top-news
FREE WEBSITE AD

(நாகேந்திரன் வேலாயுதம்)
சிரம்பான், டிச.29-

இந்நாட்டில் இந்திய சமூகத்தினர் எதிர் நோக்கி வரும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முறையான தீர்வை காண மடானி அரசாங்கத்தில் உள்ள இந்திய அமைச்சர், துணையமைச்சர்கள் வட்டமேசை பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணா வலியுறுத்தினார்.மடானி அரசாங்கத்தில் உள்ள ஓர் அமைச்சர் மற்றும் மூன்று துணையமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து அவ்வப்போது பேச்சு வார்த்தைகளை நடத்தினால் மட்டுமே, இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட முடியும் என நெகிரி செம்பிலான் மாநில ஜசெக துணைத் தலைவருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான ஆண்டனி லோக், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் ஆயோ கேசி டியோ, தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, பிரதமர் துறையைச் சேர்ந்த சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்த துணையமைச்சர் எம். குலசேகரன் மற்றும் தொழில் முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் ஆர்.ரமணன் ஆகியோருக்கு தாம் விரைவில் கடிதம் எழுதப் போவதாக அவர் வெளியிட்ட செய்தியறிக்கை ஒன்றில் குணா அவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள இவர்கள் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
ஒரு கை தட்டினால் ஓசை எழாது என்பது போல், இவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்திய சமூகத்திற்கு நல்ல தீர்வு பிறக்கும் என அவர் சொன்னார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு இந்திய சமூகத்தை 4 முழு அமைச்சர்கள் மற்றும் 1 துணையமச்சர் பிரதிநிதித்தனர்.ஆனால் இவர்கள் வட்டமேசை பேச்சு வார்த்தைகளை நடத்தியதே கிடையாது என்பதுதான் உண்மை. அந்தக் காலகட்டத்தில் 4 இந்திய அமைச்சர்கள் இருந்தும் இந்திய சமூ கத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு முறையான தீர்வு காணப்படவில்லை என குணசேகரன் குறிப்பிட்டார்.

இந்த நிலை தொடர்ந்தால் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் இந்திய சமூகத்தினர் நடப்பு அரசாங்கத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படலாம்.இதற்கு எடுத்துக்காட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சுங்கை பாக்காப் இடைத்தேர்தல் என அவர் சுட்டிக் காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *