முதலில் நம் நாட்டை ஒழுங்கமைக்க வேண்டும்! - அன்வார்

- Shan Siva
- 01 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 1: ஆசியான் அமைப்பின்
தலைவர் பதவியை நாடு ஏற்கும் நிலையில், புத்தாண்டில் சிறப்பாக செயல்பட மலேசியர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியா
பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் முன்னேற்றம் காண ஒற்றுமையை வலுப்படுத்தவும்,
ஆட்சியை மேம்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும், கசிவுகளைக் கட்டுப்படுத்தவும் வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தனது நிர்வாகம்
கடந்த ஆண்டில் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்தியதாக அன்வார் கூறினார். இந்தக்
கொள்கைகளில் சில பிரபலமற்றவை மற்றும் உடனடி முடிவுகளைத் தரவில்லை என்று அவர்
ஒப்புக்கொண்டார்.
இருப்பினும்,
இந்தக் கொள்கைகள் கடுமையாக மதிப்பிடப்பட்டு,
நேர்மையுடனும், பெரும்பான்மையான மலேசியர்களுக்கு நன்மைகளை கொண்டு வரும்
தெளிவான அரசியல் விருப்பத்துடனும் செயல்படுத்தப்பட்டன என்று அவர்
கூறினார்.
சமீபத்திய
வெள்ளம் உட்பட எதிர்பாராத நிகழ்வுகளுக்கு முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு நாட்டின்
பொருளாதாரம் விவேகத்துடன் நிர்வகிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அன்வார்
வலியுறுத்தினார்.
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை
உறுதிசெய்ய, பாதிக்கப்பட்ட
மாநில அரசுகளுடன் தனது நிர்வாகம் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *