விபத்தில் 2 பல்கலைக்கழகப் பெண் மாணவர்கள் பலி! இருவர் படுகாயம்!

top-news

டிசம்பர் 26,

ஜொகூரிலிருந்து மலாக்காவுக்குத் திரும்பும் போது 4 பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 2 பல்கலைக்கழக மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Jamil Radzi தெரிவித்தார். 
இன்று அதிகாலை 6.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த மைவி வாகனம் நெடுஞ்சாலையின் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதாகவும் 19 வயதுடைய Nurul Syafiqah Nasruddin, Nurhanis Afryna Azizan இருவர் பலியானதாகவும் 20 வயதுடைய மேலும் இரு பெண் பல்கலைக்கழக மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *