ஸ்கூடாயில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை! ஆடவர் கைது!

top-news

டிசம்பர் 29,

ஆளில்லாத நேரத்தில் வீட்டின் இரும்பு கேட்டுகளை உடைத்து ஆடவர் ஒருவர் திருடும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 32 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar தெரிவித்தார். 

கடந்த வியாழக் கிழமை நண்பகல் 12,18 மணியளவில் 40 வயது வெளிநாட்டுப் பெண் காவல் நிலையத்தில் CCTV ஆதரங்களுடன் தனது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகாரளித்த நிலையில் மறுநாள் நண்பகல் 2.30 மணியளவில் 32 வயது ஆடவரைக் கைது செய்ததாக Balveer Singh Mahindar தெரிவித்தார். 

கொள்ளை சம்பவத்தின் போது அவரின் முகம் CCTV காணொலியில் பதிவாகியிருந்தால் அவரைக் கைது செய்துள்ளதாகவும் குற்றவியல் வழக்குகளுக்காகத் தேடப்படும் நபர்களில் ஒருவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Seorang lelaki tempatan berusia 32 tahun ditahan selepas rakaman CCTV menunjukkan dia memecah masuk rumah seorang wanita asing untuk mencuri. Suspek, yang merupakan individu dikehendaki, ditangkap sehari selepas laporan dibuat kepada polis di Johor Utara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *