கிளந்தான் 9 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!

- Shan Siva
- 26 Dec, 2024
கோத்தா பாரு, டிச 26: ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாட்களில் கிளந்தானில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை கணித்துள்ளது.
தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பாசிர் பூத்தே, பாச்சோக், தானா மேரா, மாச்சாங், கோல க்ராய் மற்றும் ஜெலி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து அனைத்து பேரிடர் மேலாண்மை நிறுவனங்களும், உள்ளூர் மக்களும், குறிப்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ளவர்கள், விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *