கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி! காராக் நெடுஞ்சாலையில் விபத்து!

top-news

டிசம்பர் 26,

கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையின் நடுவே கவிழும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியது. சம்மந்தப்பட்ட காணொலி தொடர்பாக GOMBAK மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir விசாரணை அறிக்கையை வெளியிட்டார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கிளாந்தானிலிருந்து போர்ட் கிள்ளானுக்குச் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரியின் பிரேக் செயலிழந்தால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

41 வயதான லாரி ஓட்டுநர் சிராய்ப்பு காயங்களுடன் தப்பியதாகவும் பாமாயிலை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் சம்மந்தப்பட்ட சாலையில் பாமாயில் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாகத் துப்புரவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lori tangki minyak sawit hilang kawalan dan terbalik di Lebuhraya Karak akibat brek gagal berfungsi. Pemandu hanya cedera ringan. Pembersihan dilakukan akibat tumpahan minyak sawit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *