KLIA விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட மார்மோசெட்கள்!

- Shan Siva
- 25 Dec, 2024
கோலாலம்பூர், டிச 25: வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (பெர்ஹிலிடன்) நேற்று KLIA வில் மார்மோசெட்கள் எனப்படும் 52 வன விலங்குகளை கைப்பற்றிய பின்னர், சிண்டிகேட்டின் முகவராக கருதப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆவணமற்ற நிலையில் அந்த வகை விலங்குகள் ஏழு மரக் கூண்டுகளில் வைக்கப்பட்டதாக அத்துறை தெரிவித்துள்ளது.
அழிந்துவரும் உயிரினங்களுக்கான சர்வதேச வர்த்தக சட்டம் 2008 இன் கீழ் முகவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு சொந்தமான இவ்விலங்குகள், குறிப்பாக அமேசான் படுகையில், பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் காணப்படுகின்றன.
காடழிப்பு மற்றும் சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகம் காரணமாக இவ்வகை இனங்கள் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகின்றன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *