இந்திய முஸ்லிம் பெண்ணை காணவில்லை- போலீஸ் பொது மக்களின் உதவியை நாடியது!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு,டிச, 27-

ஜொகூர் மாநிலத்தின் ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் துறை, அமிரா பிந்தி கலித் என்ற இந்திய முஸ்லிம் பெண்ணை தேடும் முயற்சியில் மக்களின் உதவியை கோரியுள்ளது. அமிரா பிந்தி கலித், வயது 18 அவரது கடைசி முகவரியாகக் குறிப்பிடப்பட்ட இடம் ஜெ.ஜெ. பல் கிளினிக், ஜாலான் டெடாப் 13, தாமான் ஜொகூர் ஜெயா, 81100 ஜொகூர் பாரு, ஜொகூர் ஸ்ரீஆலம் போலீஸ் தலைமை அதிகாரி மொஹ்த் சொஹைமி பின் இசாக் வெளியிட்ட செய்தியில், அமிரா காணாமல் போன நிலையில், அவரைப் பற்றிய எந்தவொரு தகவலையும் உடனடியாக பகிர்ந்து கொள்ள பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இதற்காக, விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சா சீ கூனை 07-3532124 அல்லது 016-7697876 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அருகிலுள்ள எந்த போலீஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கலாம் எனக் கூறினார்.

அமிராவைப் பற்றிய தகவல்களுக்காக அவரது குடும்பத்தினர் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் முழுமையாக ரகசியமாக பராமரிக்கப்படும் என போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த வழக்கை சீராக முடிக்க மற்றும் குடும்பத்தினரின் பெரிய நம்பிக்கையாக உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *