10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்கள்!

- Shan Siva
- 29 Dec, 2024
கோலாலம்பூர், டிச 29: கடந்த ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு ராணுவ வீரர்கள் மீது கிளந்தானில் உள்ள கோத்தா பாரு அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
39 வயதான மஹதி
இஸ்மாயில் மற்றும் 20 வயதான ஐசத் ஹக்கீம் முகமது ஆகியோர் குற்றச்சாட்டை நீதிபதி
அஹ்மத் பஸ்லி பஹ்ருதின் முன்
ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம் பாச்சோக்கில் உள்ள ஒரு வீட்டில் 10 வயது எட்டு மாதம் நிரம்பிய
பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்கள் மீது குற்றம்
சாட்டப்பட்டது.
அவர்கள் மீது
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சவுக்கால் அடிக்கும் தண்டனைச்
சட்டம் பிரிவு 376(2)(e)-ன் கீழ் குற்றம்
சாட்டப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *