போலி முதலீட்டில் RM1.1 மில்லியனை இழந்த ஆடவர்!

top-news

ஜூன் 24,


போலியான முதலீட்டு விளம்பரத்தை நம்பி 40 வயது உள்ளூர் ஆடவர் தனது சேமிப்புப் பணமான RM1.1 மில்லியனை இழந்துள்ளதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று மாலை பாதிக்கப்பட்ட 40 வயது வர்த்தகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார். வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் புதிய நிர்வாகத் திட்டம் எனும் போர்வையில் போலியான முதலீட்டு நிறுவனத்தால் அவர் ஏமாற்றப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 40 வயது வர்த்தகர் கடந்த மார்ச் 28 முதல் ஜூன் 13 வரையில் வெளிநாட்டிலிருந்து பொருள்களை மலிவு விலையில் வாங்கி மலேசியாவில் விற்பனை செய்யும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் சுங்கத்துறையில் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகப் போலி அழைப்பை நம்பி பொருள்களை மீட்க பணத்தைச் செலுத்தியதாகவும் தெரிய வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 22 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குத் தனிதனியாக RM1.1 மில்லியன் வரையிலானப் பணத்தைப் பாதிக்கப்பட்ட ஆடவர் செலுத்தியதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார்.


Seorang lelaki berusia 40 tahun kerugian RM1.1 juta selepas terpedaya dengan skim pelaburan palsu yang menjanjikan keuntungan daripada urus niaga barangan import. Beliau membuat 22 transaksi ke pelbagai akaun bank antara Mac hingga Jun lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *