மன்னிப்புக் கோரும் விண்ணப்பங்கள் மன்னிப்பு வாரியம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 29

கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் புரியப்படும் குற்றங்களுக்காக மன்னிப்புக் கோரும் அனைத்து விண்ணப்பங்களும், மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைவராக இருக்கும் மன்னிப்பு வாரியம் மூலம் அவசியம் சமர்ப்பிக்கபபட வேண்டும். இத்தகைய முறை சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டவை என்று, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. எஞ்சியிருக்கும் தங்களின் சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் இருந்தவாறு நிறைவு செய்வதற்காக, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் உட்பட, எந்த ஒரு கைதிக்காகவும் பரிந்துரைக்க யாராவது விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை அவர்கள் மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்காக அவசியம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று, நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

“கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 421இன் கீழ், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் புரியப்படும் குற்றங்களுக்காக விதிக்கப்படும் தண்டனையை மன்னிப்பது, ஒத்தி வைப்பது மற்றும் தண்டனையை மாற்றும் அதிகாரத்தை மாமன்னர் கொண்டிருக்கின்றார்" என்று ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதோடு, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 42(2) இன் கீழ், ஒருவருக்கு எதிரான தண்டனையை ரத்து செய்யும், இடைநிறுத்தம் செய்யும் அல்லது குறைக்கும் அதிகாரம் மாமன்னருக்கு வழங்கப்படுகிறது என்றும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்தது. எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் நஜிப்புக்கு எதிராக விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை ஆறு ஆண்டாகவும் 21 கோடி வெள்ளி அபராதத்தை 5 கோடி வெள்ளியாகவும், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, மாமன்னர் தலைமை தாங்கிய கூட்டரசு பிரதேசங்களின் மன்னிப்பு வாரியம் குறைத்திருந்தது.நஜிப் தற்போது காஜாங் சிறைச்சாலையில் தமது ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை கழித்து வருகின்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *