விபத்தில் பலியானவர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் இரங்கல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 24: ஆயர் குரோ டோல் பிளாசா அருகே வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் நேற்று நடந்த பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக லோக் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்துமாறு சாலைப் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

டிரெய்லர் மற்றும் சுற்றுலாப் பேருந்தை இயக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லோக் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக கனரக வர்த்தக வாகனங்களுக்கு எதிராக கடுமையான அமலாக்கத்தை அரசு அதிகரிக்கும் என்று பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *