தந்தை இல்லாமல் என் குடும்பம் தவிக்கிறது! நஜீப்பின் மகன் உருக்கம்!

- Sangeetha K Loganathan
- 29 Dec, 2024
டிசம்பர் 29,
தொடர் ஊழல் பணமோசடி வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாக நேற்று MELAWATI அரங்கில் ஆதரவு பேரணி நடைபெற்றது. பேரணியில் நஜீப்பின் இரு மகன்களுமான DATO NAZIFUDDIN NAJIB, DATUK MOHAMAD NIZAR NAJI, ம.சீ.ச தொடர்புக் குழு தலைவர் NEOW CHOO SEONG, மக்கள் சக்தி தலைவர் DATUK SERI R.S. THANENTHIRAN, வழக்கறிஞர் TUAN HAJI KAMARUDIN AHMAD, சமூகப் பணியாளர் ZAMIL IBRAHIM ஆகியோர் பங்கேற்றனர்.
தனது குடும்பத்திற்குத் தனது தந்தை வேண்டும், மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட ஒருவரை மீண்டும் அவரின் குடும்பத்திடம் கொடுக்க வேண்டும் என நஜீப்பின் மகனும் லங்காவி அம்னோ தலைவருமான Datuk Nazifuddin Najib உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
2 ஆண்டுகள் 4 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் என் தந்தைக்கான நீதி மறுக்கப்படுவதாகவும் அவர் தரப்பு நியாயங்களை வெளிபடுத்த முடியாமல் அவர் தவிப்பதாகவும் Datuk Nazifuddin Najib தெரிவித்தார்.
அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டாலும் சட்ட ரீதியாக நாம் அதைத் தகர்த்தாலும் புதிய புதிய குற்றச்சாட்டுகளை அடுக்கி வைக்கின்றனர். சட்டத்தைக் குறை சொல்ல நாங்கள் இங்கு கூடியிருக்கவில்லை, குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர் பக்கம் இருக்கும் நியாயத்தை அவர் முன்வைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இங்கு கூடியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
Nazifuddin Najib merayu keadilan untuk bapanya, Datuk Seri Najib Razak, dalam program #DemiNajib2.0# di Melawati. Beliau mendakwa keluarga mereka menderita dan Najib dinafikan peluang mempertahankan diri secara adil.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *