மோட்டார் சைக்கிளை மோதிய இரு கார்கள்! இளம் பெண் பலி!

top-news

ஜூன் 24,


பொன்தியான் சாலையில் இரு வாகனங்கள் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது இளம்பெண் மோட்டார் சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை 6.30 மணிக்கு பொன்தியானிலிருந்து Kukup நோக்கிச் செல்லும் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக Pontian, மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த Toyota Vios, Perodua MyVi எனும் இரு வாகனங்கள் மோட்டார் சைக்கிளை மோதியதாக Pontian, மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார்.

மழையின் காரணமாக எதிர் எதிரில் வந்த Toyota Vios, Perodua MyVi வாகனங்கள் சாலையிலிருந்து விலக்கியதாகவும் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளை மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Pontian, மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார். உயிரிழந்த 18 வயது இளம் பெண் Nur Shahira Danish என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக Pontian அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் விபத்தை ஏற்படுத்திய இரு வாகனமோட்டிகளும் காயங்களின்றி தப்பியதாக Pontian, மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார்.


Seorang remaja perempuan berusia 18 tahun maut selepas motosikal yang ditunggangnya dirempuh dua buah kereta yang hilang kawalan akibat hujan di Jalan Pontian-Kukup. Mangsa dikenali sebagai Nur Shahira Danish dan mayat dibawa ke Hospital Pontian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *