துப்பாக்கியுடன் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 29 Dec, 2024
டிசம்பர் 29,
தாய்லாந்து எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் போதைப்பொருளையும் துப்பாக்கிகளையும் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கிளந்த்தானின் Rantau Panjang பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 19 வயது 34 வயது உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரிடமிருந்தும் Rifle/Carbine, Pump Gun வகை துப்பாக்கிகள், 124 தோட்டாக்கள். 76 கிராம் எடையிலான கஞ்சா, 27 YABA போதை மாத்திரைகள், 6.2 கிராம் SYABU வகை போதைப்பொருள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இருவரும் methamphetamine வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைக்காக இருவரும் Pasir Mas போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
Dua lelaki tempatan ditahan di sempadan Rantau Panjang bersama senjata api dan dadah, termasuk 76g ganja dan 27 pil YABA. Suspek kini dalam siasatan Pasir Mas Anti-Narkotik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *