கம்மி மிட்டாய் சாப்பிட்டு மாணவன் பலி!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: தனது பள்ளிக்கு வெளியே வாங்கிய கம்மி மிட்டாயை உட்கொண்டதில் மூச்சுத் திணறியதால்,  ஆபத்தான நிலையில் இருந்த 4 ஆம் வகுப்பு மாணவர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

பட்டர்வொர்த்தில் உள்ள எஸ்.கே. சுங்கை துவாவைச் சேர்ந்த 10 வயது ஃபஹ்மி ஹபீஸ் ஃபக்ருதீன் என்ற அம்மாணவன் பினாங்கு மருத்துவமனையில் நேற்று  இரவு 11 மணியளவில் காலமானார் என்று பெரிட்டா ஹரியான் தெரிவித்துள்ளது.

 இரண்டு உடன்பிறப்புகளில் மூத்தவரான ஃபஹ்மி, செவ்வாய்க்கிழமை தனது பள்ளிக்கு வெளியே மிட்டாயை வாங்கியிருந்தார். மிட்டாயை மெல்லும்போது  மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் சரிந்து விழுவதற்கு முன்பு தனது ஆசிரியரை நோக்கி நடந்து சென்றார்.

மிட்டாய் தொண்டையில் சிக்கிய பிறகு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஃபஹ்மியின் முகம் நீல நிறமாக மாறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *