இரண்டாவது ஓட்டுநர் இல்லாத விரைவுப்பேருந்துகளுக்கு சம்மன்!

top-news
FREE WEBSITE AD

புக்கிட் மெர்தாஜாம், டிச 26: 300 கிமீ அல்லது 4 மணி நேரத்திற்கும் மேலான பயணங்களை மேற்கொள்ளும் விரைவுப் பேருந்துகளில் இரண்டாவது ஓட்டுநர் இல்லாத காரணத்தினால்,  25 விரைவு மற்றும் சுற்றுலா பேருந்துகளின் நடத்துநர்களுக்கு சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே சம்மன் அனுப்பியுள்ளது.

பினாங்கில் உள்ள மூன்று சுங்கச்சாவடிகளில் சிறப்பு நடவடிக்கையின் போது இந்த சம்மன்கள் வழங்கப்பட்டன.

கிறிஸ்துமஸ் அன்று இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை நேற்று காலை 7 மணிக்கு முடிவடைந்தது என்று ஜேபிஜே தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கையின் போது 273 சம்மன்கள் வழங்கப்பட்டதாக ஜேபிஜே குறிப்பிட்டுள்ளது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *