ஒற்றுமை கூட்டணியிலிருந்து ம.சீ.ச வெளியேறி எங்கே போக போகிறீர்! அம்னோ கேள்வி!

- Sangeetha K Loganathan
- 24 Jun, 2025
ஜூன் 24,
ஒற்றுமை கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.சீ.ச தனது ஆதரவை மீட்டுக் கொள்ள விரும்புவதால் யாருக்கு என்ன பயன் எனும் கேள்வியைத் துணை அமைச்சரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான Datuk Seri Ahmad Maslan முன் வைத்துள்ளார். ம.சீ.சவுக்கு டி.ஏ.பி கட்சியுடன் பிரச்சனை. அதில் இரு கட்சிகளும் பொறுமையாக இருந்து பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என Datuk Seri Ahmad Maslan வலியுறுத்தினார். பாரிசானின் உறுப்புக் கட்சியாக ம.சீ.ச நிலைத்திருக்கும். பாரிசான் அதன் உறுப்புக் கட்சிகளைக் கைவிட்டுவிடாது என Datuk Seri Ahmad Maslan நம்பிக்கை அளித்தார்.
ஒற்றுமை கூட்டணி 153 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் ஆட்சி அமைத்துள்ளது. பாரிசான் ஒற்றுமை கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி அமைக்க 112 நாடாளுமன்ற உறுப்பினர்களே போதுமானதாக இருக்கும் நிலையில் பாரிசான் ஒற்றுமை கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் 123 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியை நடத்தும். ஆனால் பாரிசான் எதிர்க்கட்சியாகக் கூட தகுதி பெறாமல் செல்லாக்காசாகிடும் என Datuk Seri Ahmad Maslan விளக்கமளித்தார். 2 உறுப்புக் கட்சிகளான ம.சீ.சவும் டி.ஏ.பியும் அவர்களுக்கிடையிலானக் கருத்து முரண்களைச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என Datuk Seri Ahmad Maslan கேட்டுக்கொண்டார்.
Ahmad Maslan mempersoalkan hala tuju MCA jika keluar dari Kerajaan Perpaduan. Beliau menegaskan MCA dan DAP perlu selesaikan perbezaan secara matang. Tanpa BN, kerajaan masih stabil dengan 123 ahli parlimen menyokong Anwar sebagai Perdana Menteri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *