அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு! - UMT

top-news
FREE WEBSITE AD

ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவில் திரங்கானு பல்கலைக்கழகத்தின் பரதப் பண்பாட்டு கழகம் நடத்தும் அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு புரட்சியின் ஊற்று, தமிழிளையோர் கூற்று எனும் கருப்பொருளோடு எதிர்வரும் ஜனவரி 5 காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் திரங்கானு பல்கலைக்கழகத்தின் சுல்தான் மிசன் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டை ஓம்ஸ் அறவாரியத்தின் மேலாளர் முனைவர் பழனீஸ்வரன் தியாகராஜன் அவர் தலைமையேற்று நடத்தி வைக்கும் நிலையில்  மலேசியா மட்டுமின்றி சிங்கப்பூர்இலங்கைஇந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் முனைவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இம்மாநாட்டில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இளைஞர்களின் கட்டுரைப் படைப்பும் ஆக்கப்பூர்வமானத் தலைப்புகளில் கருத்தரங்கமும் நடைபெறவிருக்கிறதுகல்விமின்னியல்சமூக நீதிபருவநிலை மாற்றம் எனும் தலைப்புகளில் சிங்கப்பூர்இலங்கைஇந்தியாமலேசியா ஆகிய நாடுகளின் இளைஞர்கள் தலைமையேற்று தெளிவானக் கருத்துப் பகிர்வும் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் பொதுமக்களும் இளைஞர்கள் வரவேற்கப்படுவதால் ஏற்பாட்டுக் குழுவை HEGABISEK KUMAR: 018-3647567 | THANUSHREE: 014-9114727  |  LINISHA: 014-7362559 எனும் எண்களில் அணுகவும்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *