ஆட்டிசம்- குழந்தைகளுக்கான கெமாஸின் முதல் நர்சரி

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், டிச 25: சமூக மேம்பாட்டுத் துறையான கெமாஸின் முதல் ஆட்டிசம்- குழந்தைகளுக்கான நர்சரி அடுத்த ஆண்டு மலாகாவில் தொடங்கி B40 குழுவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைச் சந்தித்த பிறகு, இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக அம்னோ இளைஞரணித் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மல் சாலே கூறினார்.

தனியார் மையங்களில் சிகிச்சை வகுப்புகளுக்கு அதிக செலவாகும், இது பெற்றோருக்கு நிதிச்சுமையாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்தக் குழந்தைகள் நிதிக் கட்டுப்பாடுகளால் கல்வி வாய்ப்புகளைத் தவறவிடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்,

கடந்த ஜூலை மாதம், மலாகாவில் உள்ள கெமாஸ் ஆட்டிசம் நர்சரியில் பணியாற்ற ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மலாகாவில் முதல் முன்னோடித் திட்டத்தை வெற்றியடையச் செய்ய கெமாஸ் மேற்கொண்ட ஆயத்தங்களில் ஒன்று ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது என்று அவர் விளக்கினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *