மோட்டார் சைக்கிளை எரித்த பெண் கைது!

top-news

டிசம்பர் 27,

வங்கிக் கடன் நிலுவையில் இருப்பதால் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்ய முட்பட்டபோது தனது மோட்டார் சைக்கிளைப் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தைப்பிங் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nasir Ismail தெரிவித்தார். 

இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடமும் 40 வயது பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக கடன் தொகை நிலுவையில் இருந்ததால் சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்ய முட்பட்டபோது தைப்பிங்கில் உள்ள Jalan Masjid, Pokok Assam எனும் பகுதியில் 4 மணியளவில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான 40 வயது பெண் மோட்டார் சைக்கிளைக் கொடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

வாக்குவாதத்தின் இறுதியில் தனது மோட்டார் சைக்கிளைப் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் 40 வயது பெண் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Seorang wanita berusia 40 tahun di Taiping ditahan selepas membakar motosikalnya menggunakan petrol apabila pegawai bank cuba menyita kenderaannya akibat hutang tertunggak selama lebih 20 bulan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *