UTeM பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் பலி!

- Shan Siva
- 26 Dec, 2024
ஜாசின், டிச 26: வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கார் மோதியதில் இரண்டு மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTeM) மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
இன்று காலை 6.20
மணியளவில் வடக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் KM187.6 வழியாக நூர் ஹனிஸ் சுரயா ஓட்டிச் சென்ற கார் சறுக்கி
அவசரப் பாதையில் சென்றது.
இதனை அடுத்து முன் இருக்கையில் அமர்ந்திருந்த நூருல் சியாபிகாவும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த நூர்ஹானிஸ் அப்ரினாவும்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓட்டுநருக்கு
காலில் காயம் ஏற்பட்டது, மற்ற காயமடைந்த
பயணி சிறிய காயங்களுக்கு ஆளானார் என்று அவர்
கூறினார்.
நான்கு
மாணவர்களும் ஜொகூரில் இருந்து மலாக்கா நோக்கி பயணித்த போது விபத்துக்குள்ளானது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *