அமெரிக்கா- மலேசியா பேச்சுவார்த்தை சரியான தடத்தில்தான் செல்கிறது- தெங்கு ஸஃப்ருல் தகவல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன்


அமெரிக்கா விதித்துள்ள ஒருதலைப்பட்சமான வர்த்தக வரிகள் நடப்புக்கு வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருக்கும் வேளையில், அதன் தொடர்பாக வாஷிங்டனுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தை சரியான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதில் நல்ல முன்னேற்றமும் காணப்பட்டு வருகிறது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் நேற்று தெரிவித்தார்.

ஜூன் 18 மற்றும் 20ஆம் தேதிக்கு இடையில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடமும் அந்நாட்டின் வர்த்தக அமைச்சரிடமும் இரண்டு முறை சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன என்று தெங்கு ஸஃப்ருல் குறிப்பிட்டார். அமெரிக்காவின் வரிவிதிப்பின் அமலாக்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 90 நாள் முடக்கம் ஜூலை 8ஆம் தேதி முடிவடையவிருப்பதால் அதற்குள் மலேசிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்துவரும் பேச்சில் ஒரு முடிவு பிறக்கும் என்றார் அவர்.

இருவழி முதலீடு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும் அப்பேச்சுவார்த்தையை தெங்கு ஸஃப்ருல் தலைமையிலான பேராளர்கள் குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவுக்கு மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 24 விழுக்காடு வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஜூலை 9ஆம் தேதியன்று இது அமலுக்கு வருகிறது.

Menteri Tengku Zafrul menyatakan rundingan dengan AS berkaitan cukai perdagangan sedang berjalan lancar. Amerika merancang mengenakan cukai 24% terhadap barangan Malaysia mulai 9 Julai. Malaysia berharap capai penyelesaian sebelum tamat tempoh penangguhan pada 8 Julai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *