கண்ணீர் மல்க மண்டியிட்டு நன்றி! சையத் சாடிக் குடும்பத்தினர் நெகிழ்ச்சி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 25: ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து மூவார் எம்.பி. சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதை அடுத்து, கண்ணீருடன் தனது குடும்பத்தினர் சூழ நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்.

தனது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த பிறகு மண்டியிட்டு குடும்பத்தினருடன் நன்றி சொல்லி நெகிழ்ந்த காட்சிகள் பலரையும் உருகச் செய்தது.

 பல வருட துன்பங்கள், மிரட்டல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டு ஆகியவற்றைத் தாங்கிய பிறகு, ஆழ்ந்த நன்றியுணர்வை உணர்ந்ததாகவும், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கும் தனது கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதற்கும் தனது உறுதிப்பாட்டை இத்தீர்ப்ப்யு மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

நான் எதற்கும் வருத்தப்படவில்லை, அதையெல்லாம் மீண்டும் கடந்து செல்ல நான் பயப்படவில்லை. இறுதியில், அது மதிப்புக்குரியது என்று சையத் சாடிக் கூறினார்.

இப்போதைக்கு தனது குடும்பத்தினருடன் இருக்க விரும்புவதாகவும், மூடாவின் தலைமையில் மீண்டும் இணைவது குறித்து, கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Selepas dibebaskan, Syed Saddiq meluahkan rasa syukur sambil menangis bersama keluarganya. Beliau menegaskan komitmennya kepada rakyat dan prinsip perjuangannya. Soal kembali memimpin MUDA diserahkan sepenuhnya kepada keputusan parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *