கிரிக் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM 10,000 - RM 5000 நிதி உதவி

- Shan Siva
- 11 Jun, 2025
இறந்தவர்களின்
குடும்பங்களுக்கு RM10,000 உதவித் தொகையும்,
காயமடைந்தவர்களுக்கு RM5,000 உதவித் தொகையும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் அமைச்சரவையில் கூறியதாக அரசாங்க
செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும்
அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக
காப்பீட்டு அம்சங்களை ஆராயுமாறு பிரதமர், சட்டத்துறை தலைமை
அலுவலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஃபஹ்மி
இங்கு அங்காசபுரியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், தற்போதைய கொள்கையின்படி, விபத்தில் பலியான மாணவர்களுக்கான தேசிய உயர் கல்வி நிதிக் கழகக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியதாக ஃபஹ்மி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *