கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலை மேம்பாடு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்! - அந்தோணி லோக்

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஜூன் 10: கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை (JRTB) மேம்படுத்த எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து அமைச்சு நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நேற்று இந்த வழித்தடத்தில் ஏற்பட்ட கோர விபத்து குறித்து விசாரித்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க தனது அமைச்சு பல அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பிரச்சினை தங்களுக்கு கவலையளிக்கும் ஒன்றாக இருப்பதாகவும், அதில் முதலாவது சாலைத் தடைகள் மட்டுமல்ல, சாலை நிலைமைகள் மற்றும் இரவில் தெரு விளக்குகள் இல்லாதது ஆகியவையும் அடங்கும் என்றும் அவர் இன்று CruiseWorld Malaysia 2025 ஐத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

Menteri Pengangkutan akan membincangkan tindakan segera menaik taraf Jalan Raya Timur-Barat (JRTB) dalam mesyuarat Kabinet esok. Isu keselamatan seperti halangan jalan, keadaan jalan dan lampu jalan akan diberi perhatian serius susulan kemalangan baru-baru ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *