சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகிறாரா தெங்கு ஜஃப்ருல்?!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 4: அண்மையில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஒரு சிறிய மாற்றமாக இருந்தாலும் சரி அல்லது பெரிய மாற்றமாக இருந்தாலும் சரி, அமைச்சரவை மாற்றம் இப்போது தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது.

ஆனால் ஒரு கேள்வி தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது - டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் அரசாங்கத்தில் நீடிப்பாரா? என்பதுதான் அது.

தற்போது ஹஜ் யாத்திரையில் இருக்கும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான் ஆவர், தனது அனைத்து அம்னோ பதவிகளிலிருந்தும் விலகி, பிகேஆரில் சேருவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிலர் தெங்கு ஜஃப்ருலை பொருளாதார அமைச்சராக டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லிக்கு மாற்றாக நியமிக்கலாம் என்று கூறினாலும், அவரது செனட் பதவிக்காலம் முடிவடையவிருப்பதை அடுத்து, புத்ராஜெயாவில் அவரது எதிர்காலம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மலேசிய அரசியலில்,தெங்கு ஜஃப்ருலின் பாதை திருப்பத்தை எற்படுத்தலாம் என்கிறார், மலாயா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் முகமது தவ்ஃபிக் யாகூப் .

தெங்கு ஜஃப்ருல் கூட்டரசு மட்டத்தில் அல்ல, மாறாக ஒற்றுமை அரசாங்கத்தின் பொருளாதார இயந்திரமான சிலாங்கூரில் ஒரு முக்கிய பதவிக்கு நியமிக்கப்படலாம் என்கிறார் அவர்.

தெங்கு ஜஃப்ருல் பொருளாதார அமைச்சகத்திற்கு அவர் மாறமாட்டார் என்றும், உண்மையில், அவர் சிலாங்கூர் மந்திரி புசார் பதவி போன்ற பெரிய விஷயங்களுக்காகவே அவர் தயாராகி வருவதாக தாம் நம்புவதாகவும் தவ்ஃபிக் தி சன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (மிட்டி) அல்லது சிலாங்கூரை வழிநடத்தும் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது பொருளாதார அமைச்சு என்பது மிகவும் சிறியது. முதலீடுகளை இயக்குவதில் அவரது சாதனைப் பதிவு, ஒரு தொழில்துறை சக்தி மையமாக சிலாங்கூரின் லட்சியத்துடன் சரியாகப் பொருந்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.9% சிலாங்கூர் பங்களிக்கிறது."

இடைத்தேர்தல் ஒருவேளை மாநிலத் தலைமைக்குள் நுழைவதற்கு வழி வகுக்கும் என்று தவ்ஃபிக் மேலும் கூறினார்.

விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், தற்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி சுங்கை துவா சட்டமன்றம் மற்றும் கோம்பாக் நாடாளுமன்ற இடங்களை வைத்திருக்கிறார்.

அமிருதீன் மத்திய பதவிக்கு மாறினால், அவர் தனது மாநில பதவியைத் தக்கவைத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. சுங்கை துவாவில் இடைத்தேர்தல் ஜஃப்ருலுக்கு வழிவகுக்கக்கூடும்.”

15வது பொதுத் தேர்தலில் அமிருதீன் 5,185 வாக்குகள் பெரும்பான்மையுடன் சுங்கை துவா இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

தெங்கு ஜஃப்ருலின் நியமனம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆரின் பிம்பத்தை உயர்த்தக்கூடும்.

முதலீடுகளைப் பெறுவதில் தெங்கு ஜஃப்ருல் அளித்த வலுவான செயல்திறனைக் காரணம் காட்டி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தெங்கு ஜஃப்ருல் தனது அமைச்சர் பதவியில் நீடிப்பார் என்று உறுதிப்படுத்தியுள்ளார் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Dua menteri letak jawatan mencetus jangkaan rombakan kabinet. Masa depan Tengku Zafrul jadi persoalan, dengan kemungkinan dilantik ke jawatan utama di Selangor. Keupayaannya dalam pelaburan mungkin kekal relevan, bergantung kepada keputusan PM Anwar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *