காண்டாக்ட் லென்ஸில் காத்திருக்கும் ஆபத்து! - நிபுணர்கள் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: ஆன்லைனில் வாங்கிய வண்ண லென்ஸ்களை அணிவதாலோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாலோ பார்வைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை கடுமையான கண் தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயு என்று அழைக்கப்படும் 23 வயது பெண், ஆன்லைன் மூலம் வாங்கிய காஸ்மெடிக் காண்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்தியதால் பெரும் பாதிப்புக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளி உணர்திறன் உட்பட, கண் வீக்கம், சிவத்தல் போன்ற உபாதைகளில் அவர் சிரமத்திற்குள்ளாகியுள்ளார். அவருக்கு கடுமையான கார்னியல் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

மருந்துச் சீட்டு இல்லாமல் ஆன்லைனில் காண்டாக்ட் லென்ஸ்கள் வாங்குவது குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று மலேசிய ஆப்டோமெட்ரி அகாடமி (PAOM) தலைவர் பேராசிரியர் டாக்டர் பரியா முகமது அலி தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் வாங்கப்படும் வண்ண லென்ஸ்கள் பெரும்பாலும் தரமற்ற நிறமிகளைக் கொண்டிருக்கின்றன, அவை கண்ணின் மேற்பரப்பில் பிரிந்து ஒட்டிக்கொள்ளக்கூடும் என்று அவர் எச்சரித்தார்!

Penggunaan kanta lekap kosmetik yang dibeli dalam talian boleh menyebabkan jangkitan mata serius. Seorang wanita mengalami keradangan dan jangkitan kornea. Pakar menasihatkan agar elak berkongsi atau membeli kanta tanpa preskripsi kerana risiko kesihatan mata yang tinggi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *