RM 11 கோடியே 14 லட்சம் மதிப்புள்ள மின்னணுக் கழிவுகள் பறிமுதல்! - GOF அதிரடி நடவடிக்கை

top-news
FREE WEBSITE AD

பத்து காஜா, ஜூன் 17: தேசிய பொது செயல்பாட்டுப் படையான GOF-ன் வடக்குப் படையணி, பத்து காஜா, லஹாட் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஐந்து மியான்மர் நாட்டினரைக் கைது செய்துள்ளது.

அவர்கள் உரிமம் பெறாத மின்னணுக் கழிவுகளளை வைத்து மறுசுழற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது, பறிமுதல் செய்யப்பட்ட அவற்றின் மொத்த மதிப்பு 11 கோடியே 14 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை 7 மணிக்கு தொடங்கி ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு பெண் உட்பட ஐந்து மியான்மர் நாட்டினரும் கைது செய்யப்பட்டதாக உலு கிந்தா GOF வடக்குப் படையணித் தளபதி SAC ஷாஹ்ரம் ஹாஷிம் தெரிவித்தார்.

இந்தத் தொழிற்சாலை சுமார் ஒரு வருடமாக மின் கழிவுகள், பிளாஸ்டிக், உலோகங்கள் மற்றும் அலுமினியத்தைப் பதப்படுத்தி வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் துறையின் எந்த ஒப்புதலும் இல்லாமல் இந்த வசதி செயல்பட்டு வருவதை ஆய்வுகளில் உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

தொழிற்சாலையின் உரிமையாளர் குறித்து கூடுதல் தகவல்களை இன்னும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தொழிற்சாலையில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்றும் ஷாஹ்ரம் மேலும் கூறினார்.

இந்த வழக்கு தற்போது குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) இன் கீழும், சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் பிரிவு 34A மற்றும் 34B இன் கீழும் விசாரிக்கப்படுகிறது!

GOF Utara menahan lima warga Myanmar di sebuah kilang di Lahat kerana kitar semula sisa elektronik tanpa lesen. Sisa bernilai RM11.14 juta dirampas. Kilang beroperasi tanpa kelulusan alam sekitar dan menggaji pekerja asing tanpa dokumen sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *